வைத்தியசலைக்கு சென்று, இளம் மனைவிக்கு விஷம் கொடுத்த கணவன். மனைவி கவலைக்கிடம். kn


தனது இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கணவர்
ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹுன்னஸ்கிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


பலவந்தமாக விஷம் கொடுத்த மனைவி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

எனினும் மனைவியின் நிலைமை தீவிரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.


வேறொரு சிகிச்சைக்கு உடதும்பர வைத்தியசாலையில் இதற்கு முன்னர் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற கணவர், மனைவியின் வாயை பலவந்தமாக திறந்து விஷயத்தை ஊற்றியுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விஷம் ஊற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வைத்தியசலைக்கு சென்று, இளம் மனைவிக்கு விஷம் கொடுத்த கணவன். மனைவி கவலைக்கிடம். kn வைத்தியசலைக்கு சென்று, இளம் மனைவிக்கு விஷம் கொடுத்த கணவன். மனைவி கவலைக்கிடம். kn Reviewed by nafees on 19:47 Rating: 5

No comments:

Powered by Blogger.