கம்பளை பிரதேச விபத்தில் மூவர் பரிதாபமாக பலி.


கம்பளை - கஹவத்த - துந்தெனிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளதுடன்
ஒருவர் காயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்கு உள்ளானதிலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு உள்ளது.

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரகாபொல , மெரிகிரிய மற்றும் கம்பளை பிரதேசங்களை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பளை பிரதேச விபத்தில் மூவர் பரிதாபமாக பலி. கம்பளை பிரதேச விபத்தில் மூவர் பரிதாபமாக பலி. Reviewed by nafees on 06:27 Rating: 5

No comments:

Powered by Blogger.