தங்கத்தின் மீதான வரி, நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நன்மையையே தரும்.


-எஸ். வினோத்-
நாட்டில் முன்னர் தங்க இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட தடை நீக்­கப்­பட்ட போதிலும் அதன் நோக்கம்
சரி­யான முறையில் நிறை­வேற வில்லை. மாறாக அதனால் சட்­ட­வி­ரோத தங்கக் கடத்­தலே அதி­க­ரித்­தது. ஆகை­யால்தான் நாம் இவ்­வ­ரியை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­தினோம் இது நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நன்­மை­ப­யக்கும் செய­லாகும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்லா தெரி­வித்தார்.

நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தங்க இறக்­கு­மதி வரி­கு­றித்து வின­விய போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது.

தங்க இறக்­கு­மதி மீதான தடை­யா­னது நாட்­டுக்கு புதிய விட­ய­மல்ல முன்­னரும் இந்த வரி முறைமை இலங்­கையில் நடை­மு­றையில் இருந்­தது. இந்த வரி­யா­னது தங்க ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்கும் நோக்­குடன் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தின் போது நீக்­கப்­பட்­டது. ஆனால் அந்த நோக்கம் சரி­யான முறையில் நிறை­வேற வில்லை. மாறாக தங்க இறக்­கு­மதி அதி­ரித்­த­துடன் தங்க கடத்தல் அதி­க­ரித்­தது.

அந்த வகையில் இந்த வரி நீக்­கப்­பட்­டதன் பின்னர் ஒரு வருட காலத்­திற்கு 650 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான தங்கம் இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக மத்­திய வங்க அறி­வித்­துள்­ளது. இத் தொகை­யா­னது எமது நாட்­டடை பொறுத்­த­வ­ரைக்கும் அதி­க­மா­ன­தாகும். இறக்­கு­மதி செய்­யப்­படும் தங்­கத்தில் 90 சத­வீ­த­மா­னவை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வெ ளிநா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக இந்­தி­யா­வுக்கு அதி­க­ள­வான தங்கம் கடத்­தப்­ப­டு­கின்­றது.

இதனால் அர­சாங்­கத்­திற்கு எவ்­வித நன்­மையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. அதே போல் வருடம் ஒன்­றுக்கு 650 மில்­லியன் டொலர் பெறு­ம­திக்கு தங்கம் இறக்­கு­மதி செய்யும் போது எமது நாட்டின் இறக்­கு­மதி செல­வினம் அதி­க­ரிக்கும் அது நாட்டின் வெ ளிநாட்டு செலா­வணி கையி­ருப்பை பாதிக்கும். இதனால் உள்­நாட்டு சந்­தையில் பண­வீக்கம் ஏற்­பட்டு சந்­தையில் பொருட்­களின் விலை அதி­க­ரிக்கும். இறு­தியில் சாதா­ரண பொது மக்­களே பாதிக்­கப்­ப­டுவர்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் அள­வுக்கு ஏற்ப முறை­யான நுகர்வு மற்றும் சட்­டப்­ப­டி­யான ஏற்­று­மதி இடம் பெறு­மாயின் அது நாட்­டுக்­கு­நன்மை பயக்கும் ஆனால் இன்று நிலைமை அவ்­வாறு இல்லை நாம் இறக்­கு­மதி செல­வி­னத்தை மாத்­தி­ரமே சுமக்க வேண்­டி­ய­துள்­ளது.

எனவே தங்க இறக்­கு­ம­தியை குறைப்­ப­தற்கும் சட்­ட­வி­ரோத கடத்­தலை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் என்ற வகையில் எமக்கு கடப்­பாடு இருந்­தது. ஆகை­யால்தான் நாம் இந்த வரியை நடை­மு­றைப்­ப­டுத்­தினோம். இது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு நன்­மை­ப­யக்கும்.

மேலும் இந்த வரி விதிப்பினால் வெ ளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அனேகமானவர்கள் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும் காரணம் தங்கம் கடத்தும் செயலானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலேயே அதிகம் இடம்பெற்று வருகின்றது
தங்கத்தின் மீதான வரி, நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நன்மையையே தரும். தங்கத்தின் மீதான வரி, நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நன்மையையே தரும். Reviewed by nafees on 02:36 Rating: 5

No comments:

Powered by Blogger.