சீரற்ற காலநிலை .. வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை..



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும்
ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தென் மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். 

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீரற்ற காலநிலை .. வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை..  சீரற்ற காலநிலை .. வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை.. Reviewed by nafees on 21:04 Rating: 5

No comments:

Powered by Blogger.