ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வது... ஆகஸ்ட்டில் அறிவிப்பை வெளியிடவுள்ள கோத்­த­பாய ராஜபக்ஷ . சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடனும் விரைவில் பேச்சுவார்த்தை.


எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்­பான அறி­விப்­பை முன்னாள் பாது­காப்புச் செய­லாளர்
கோத்­த­பாய ராஜபக்ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம­ளவில் வெளி­யி­ட­வுள்ள­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதற்­ கேற்ற நட­வ­டிக்­கை­களில் அவர் ஈடு­பட்­டுள்ளார். தற்­போ­தைய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும்   சிறு­பான்மைக் கட்­சி­களின் தலை­வர்கள் பல­ரிடம் இந்த விவ­காரம் தொடர்பில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தூது அனுப்­பி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் தனித்­த­னி­யாக சந்­தித்து கலந்­து­ரை­யாட விரும்­பு­வ­தாக கோத்­த­பாய ராஜபக் ஷவின் சார்பில் சில தலை­வர்­க­ளுக்கு தூது அனுப்­பப்­பட்­டுள்­ளது.

தற்­போது யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­மை­யினால் தூய்­மை­யான நாட்­டினை உரு­வாக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. எனவே அந்தப் பணி­யினை தன்னால் முன்­னெ­டுக்க முடி­யு­மென்றும் அதற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க முன்­வ­ரு­மாறும் கோத்­த­பாய ராஜபக்ஷ கோரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்தநிலையில் விரைவில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வது... ஆகஸ்ட்டில் அறிவிப்பை வெளியிடவுள்ள கோத்­த­பாய ராஜபக்ஷ . சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடனும் விரைவில் பேச்சுவார்த்தை. ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வது... ஆகஸ்ட்டில் அறிவிப்பை வெளியிடவுள்ள  கோத்­த­பாய ராஜபக்ஷ . சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடனும் விரைவில் பேச்சுவார்த்தை. Reviewed by nafees on 01:33 Rating: 5

No comments:

Powered by Blogger.