(படங்கள்) அப்டேட்... ஹுலுகங்கையில் அடித்து செல்லபட்ட ஐந்து பேர் அம்பாறையை சேர்ந்தவர்கள்.


கண்டி - பன்வில - ஹுலுகங்கை பிரதேச ஆறொன்றில் வீழ்ந்து  இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் இருவரை காணவில்லை என செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது உயிரிழந்தவர்கள் தொகை ஐந்தாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

அம்பாறை பகுதியை சேர்ந்த ஒரு குழு சுற்றுலா வந்த நிலையில் ஹுலுகங்கை - கொஸ்கம பகுதியில் தங்கி இருந்த போது,  அருகில் இருந்த ஆற்றுக்கு சென்றபோது  வீழ்ந்து அடித்து செல்லபட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் அவர்களில் அனேகமானோர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும்   தெரிவிக்கபடுகிறது.

கண்டி உற்பட பல பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலையில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்நிலையில் நீர்த்தேக்கம் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இவ்வசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

(படங்கள்) அப்டேட்... ஹுலுகங்கையில் அடித்து செல்லபட்ட ஐந்து பேர் அம்பாறையை சேர்ந்தவர்கள். (படங்கள்) அப்டேட்...  ஹுலுகங்கையில் அடித்து செல்லபட்ட ஐந்து பேர்  அம்பாறையை சேர்ந்தவர்கள். Reviewed by nafees on 06:36 Rating: 5

No comments:

Powered by Blogger.