மக்கள் நம்பும் புதிய அமைச்­ச­ரவையை உருவாக்குவேன்.


நாட்டு மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு
திட்­ட­மிட்­டுள்ளேன். புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்­கும்­போது அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­டு­கின்­ற­வர்­களின் சர்­வ­தேச பிர­தி­ப­லிப்பு குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன லண்­ட­னுக்கு சென்­றி­ருந்­த­போது அங்கு பி.பி. சி. சிங்­கள செய்தி சேவைக்கு நேற்று முன்தினம் வழங்­கிய செவ்­வி­யி­லேயே இந்த விட­யத்தை குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது
புதிய அமைச்­ச­ர­வைக்கு அமைச்­சர்­களை நிய­மிக்­கும்­போது அவர்­களின் உள்­நாட்டு நிலைமை மட்­டு­மன்றி சர்­வ­தேச பிர­தி­ப­லிப்பு குறித்தும் ஆரா­யப்­படும்.

அண்­மையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பத­விக்­கான நிய­ம­னத்­தின்­போது சர்­வ­தேச நிலை­மை­க­ளையும் பார்க்­க­வேண்­டிய தேவை எனக்கு இருந்­தது.

எந்­த­வொரு விட­ய­மா­னாலும் ஒரு அமைச்­சரை நிய­மிக்­கும்­போது அவர் சர்­வ­தேச ரீதி­யிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­ப­வ­ராக இருக்­க­வேண்டும்.

தற்­போது அமைச்­ச­ரவை மாற்றம் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. மாறாக புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். நாட்டு மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன் என்றார்.

இதன்­போது புதிய அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்கை குறித்து பி.பி. சி. செய்­தி­யாளர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்கு இன்னும் ஒரு­வார காலம் உள்­ளது என்று குறிப்­பிட்டார்.

மேலும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாகி பதவி விலக்­கப்­பட்ட அமைச்­சர்­களை மீண்டும் நிய­மிப்­பதா இல்­லையா என்­பது குறித்து அர­சியல் கட்­சி­களே தீர்­மானம் எடுக்கவேண்டும்.

நான் இம்முறை அமைச்சர்களை நியமிக்கும்போது அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா என்பது குறித்து தேடிப்பாரப்பேன். அதன்படி மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையிலான அமைச்சரவையை நியமிப்பேன் என்றார்.
மக்கள் நம்பும் புதிய அமைச்­ச­ரவையை உருவாக்குவேன். மக்கள் நம்பும்  புதிய அமைச்­ச­ரவையை  உருவாக்குவேன். Reviewed by nafees on 02:29 Rating: 5

No comments:

Powered by Blogger.