தாயும் மகளும், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படு கொலை.

மஹியங்கனைப் பிரதேசத்தில் தாயும் மகளும், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை
செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், மஹியங்கனை, மாபாகடவௌ பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.
மாபாகடவௌ பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண்ணும் அவரது 40 வயதான மகளுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
தாயும் மகளும், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படு கொலை.
Reviewed by nafees
on
23:09
Rating:
Reviewed by nafees
on
23:09
Rating:
No comments: