பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ரணிலுக்கு எழுத்து மூலம் கடிதம் சமர்ப்பித்தது.


நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
பதவியில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவால் இது தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து இதற்கான தீர்மானம் நேற்றிரவு ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ரணிலுக்கு எழுத்து மூலம் கடிதம் சமர்ப்பித்தது. பிரதமர்  பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ரணிலுக்கு எழுத்து மூலம் கடிதம் சமர்ப்பித்தது. Reviewed by nafees on 23:49 Rating: 5

No comments:

Powered by Blogger.