கோட்டபாய ராஜபக்சவை விசாரிக்க வேண்டுகோள் விடுக்கும் மேர்வின் சில்வா.


வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களில், உத்தரவுகளைப் பிறப்பித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கான தைரியம் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இல்லையென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தரவுகள் இன்றி எதுவும் நடைபெறப்போவது இல்லையென அவர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் " பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே உத்தரவுகளை பிறப்பித்திருக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்துடனும் கோட்டபாய ராஜபக்சவுக்கு தொடர்புகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

"பாதாள உலகக் குழுக்களுடன் எவருக்காவது தொடர்புகள் காணப்பட்டால் அவர் படுகொலை செய்யப்படுவார் எனினும் பொலிஸ் விசாரணைகள் எதுவுத் முன்னெடுக்கப்படமாட்டாது. பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களை படுகொலை செய்வதற்கான உரிமை அரசியல்வாதிகளுக்கு இல்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டபாய ராஜபக்சவை விசாரிக்க வேண்டுகோள் விடுக்கும் மேர்வின் சில்வா. கோட்டபாய ராஜபக்சவை விசாரிக்க வேண்டுகோள் விடுக்கும் மேர்வின் சில்வா. Reviewed by nafees on 23:53 Rating: 5

No comments:

Powered by Blogger.