பொது மக்களிடம் நிதி மோசடி.. இவர் பற்றி தெரிந்தால் உடன் அறிவிக்கவும்.

வங்கியில் கடமையாற்றுவதாக தெரிவித்து போலி இறப்பர் முத்திரைகளை பயன்படுத்தி பொது
மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுவந்ததாக சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரை கொழும்பு மோசடி விசாரணைகள் பிரிவு பொலிஸார் வலைவீசி தேடிவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வங்கியில் கடமையாற்றுவதாக தெரிவித்து போலி இறப்பர் முத்திரைகளை தயாரித்து நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவரை பொலிஸார் வலைவீசி தேடுகின்றனர்.
இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குறித்த பெண் தொடர்பில் கோட்டை, மாளிகாவத்தை மற்றும் மொரட்டுவ நீதிமன்றங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகள் காணப்படுவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பிரதமதந்திரிகே தொன் நிஷாதி தனுஷிகா எனப்படும் 36 வயதுடைய இல.66 அலுபொகஹாவத்த மடப்பன பிலியன்தல முகவரியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்திவரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவளை சந்தேக நபரை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளதுடன், இப்பெண் குறித்து ஏதேனும் தகவல் இருப்பின் பொலிஸ் அத்தியட்சகருக்கு 011 2673593 என்ற இலக்கம் ஊடாகவும், நிலைய பொறுப்பதிகாரிக்கு 011 2673571 என்ற இலக்கம் ஊடாகவும் கொழும்பு மோசடிகள் விசாரணை பிரிவின் 0112673590 தொலைப்பேசி இலக்கத்திற்கும் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் நிதி மோசடி.. இவர் பற்றி தெரிந்தால் உடன் அறிவிக்கவும்.
Reviewed by nafees
on
23:54
Rating:
Reviewed by nafees
on
23:54
Rating:
No comments: