நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது. இரவு 9 மணியின் பின்னர் வாக்கெடுப்பு.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்
ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமே பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்கள் சந்திப்புக்கள் ஆகியவற்றைக் கடந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
இரவு 9 மணிவரை விவாதம் தொடர உள்ள அதேவேளை, 9 மணியின் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது. இரவு 9 மணியின் பின்னர் வாக்கெடுப்பு.
Reviewed by nafees
on
22:06
Rating:
Reviewed by nafees
on
22:06
Rating:
No comments: