எதிர்வரும் 8 ம் திகதி சு காவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியில் அமர்வோம் ..

எதிர்வரும் 8 ம் திகதி சு காவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியில் அமர்வதாக
முன்னாள் அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க குறிப்பிட்டார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு வாக்களிக்காமல் தவிர்ந்தவர்களில் பல உறுப்பினர்கள் எதிர்கட்சியில் விரைவில் இணைந்துகொள்வர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று மாலை சு க பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரை கொண்ட குழு முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளைய தினம் சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற உள்ள அதேவேளை பாராளுமன்ற குழு சந்திப்பும் இடம்பெற உள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இதர உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பார்கள் என் தெரிகிறது.
எதிர்வரும் 8 ம் திகதி சு காவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியில் அமர்வோம் ..
Reviewed by nafees
on
10:44
Rating:
No comments: