படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 24 கிலோகிராம் தங்கம் சிக்கியது.


170 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த 24 கிலோகிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் மூவர்,
தலைமன்னாரில் வைத்து கடற்படையினரால் நேற்றைய தினம் (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட குறித்த தங்கத்தை, இன்று (12) யாழ்ப்பாண சுங்கத் திணைக்களத்தில் கையளிக்கவுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஷ் பண்டார மேலும்  தெரிவித்துள்ளார்.
படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 24 கிலோகிராம் தங்கம் சிக்கியது. படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு கடத்தப்பட்ட   24 கிலோகிராம் தங்கம் சிக்கியது. Reviewed by nafees on 23:05 Rating: 5

No comments:

Powered by Blogger.