2020 இன் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அரசியல் வெற்றி இலக்கை அடைவதற்கான பயணத்தை ஆரம்பிக்க நம்பிக்கையில்லா பிரேரணை முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை.
அவற்றை நிறைவேற்றுவதற்கான பயணத்தை ஆரம்பிக்க உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றியினை கொண்டாடும் வகையில் நேற்று இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்
ஐக்கிய தேசிய கட்சி பலம் வாய்ந்த கட்சி என்பதை பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நிரூபித்து விட்டனர். நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றி கூட்டு எதிர்க்கட்சிக்கு பாரிய பதிலடியாக காணப்படுகின்றது. தேசிய அரசாங்கம் மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை. உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவில்லை. எப்படி செயற்பட வேண்டும் என நினைவுப்படுத்தினர். மக்களுக்காக பாரிய மாற்றங்களை ஐக்கிய தேசிய கட்சி ஏற்படுத்தும்.
எனக்கு எதிராக கூட்டு எதிர்கட்சயினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை எனக்கு எதிரானது மட்டுமல்ல தேசிய அரசாங்கத்திற்கும் நல்லாட்சிக்கும் எதிரானதாகவே காணப்பட்டது. கட்சியில் காணப்பட்ட ஒரு சில குறைகளை மையப்படுத்தி சில விசமிிகள் கட்சிக்குள் பிள வினை ஏற்படுத்த முற்பட்டனர். அவர்களின் முயற்சிகள் தற்போது தோல்வியடைந்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் மறுசீரமைப்பினை மேற்கொள்வது தற்போது பெற்றுக் கொண்ட வெற்றியின் பிரதான தேவையாக காணப்படுகின்றது. கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பாரிய வெற்றியினை பெறமுடியும். தேசிய அரசாங்கத்தினை முழுமையாக அழிப்பதே கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த வாக்குறுதிகளை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஒருபோதும் மறக்கபோவதில்லை. இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கமாக இணைந்து செயற்படும். தேசிய அரசாங்கத்தில் காணப்படுகின்ற சில குறை பாடுகளை எதிர்தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்து தேசிய கொள்கைகளுக்கு இழுக்கினை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த கிழமைக்குள் கட்சியின் மறுசீரமைப்பினை மேற்கொண்டு மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் நிர்வாகத்தினை மேற்கொள்ளும்.. நம்பிக்கையில்லா பிரேரணையினை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தமைக்கு கூட்டு எதிரணியினருக்கு நன்றிகளை கூற வேண்டும் ஏனெனில் பெறப்பட்ட வெற்றியின் பின்னரே கட்சி மேலும் வலுவடைந்துள்ளது.
2020ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களை ் நீக்குமாறு கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ் கலந்துரையாடலினை மேற்கொண்டதன் பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
பெறப்பட்டுள்ள வெற்றியினை நாட்டுமக்கள் கொண்டாடி வருகின்றனர். மக்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், கட்சி பேதமின்றி ஆதரவினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பிணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
2020 இன் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டுவிட்டது.
Reviewed by nafees
on
22:24
Rating:
Reviewed by nafees
on
22:24
Rating:
அழுத்கமவில் மஹிந்த கொஞ்சம் கொடுத்து போனாரு இவரு திகனயில் வட்டியும் முதலுமா கொடுத்தாரு இனி 2020 பிறகு இன்னும் ஏது குறையா வைத்து சென்று இருந்தால் அது எல்லாம் பெற தயாரா இவருக்கு வாக்கு அளிக்கவும்.
ReplyDelete