பேஸ்புக்கை முடக்கியதால் நாடு பொரு­ளா­தார ரீதியில் பாதக விளை­வு­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வருகின்றது.


சமூக வலைப்­ப­திவு தளங்­களை தனி­ந­பர்கள் தவ­றாக பயன்­ப­டுத்­து­வதை கட்­டுப்­ப­டுத்த உரிய நிறு­வ­னங்­க­ளுடன்
புதிய உடன்­ப­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்­ளது எனவும் விரைவில் இலங்­கையில் புதிய வேலைத்­திட்டம் ஒன்றை தாம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

முகப்­புத்­தகம் உள்­ளிட்ட வலைப்­ப­திவு தளங்­களை முடக்­கி­ய­மை­யினால் பொரு­ளா­தார ரீதியில் பாதக விளை­வு­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு இலங்கை பிர­ஜை­களை சந்­தித்து இலங்­கையின் நிலை­மைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இந்த சந்­திப்பின் போதே அவர் சமூக வலை­தள முடக்கம் குறித்தும் கருத்­துக்­களை பகிர்ந்­துள்ளார். அங்கு அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

கண்­டியில் இடம்­பெற்ற முரண்­பா­டு­களின் பின்னர் பிரச்­சி­னைகள் பார­தூ­ர­மாக மாற்றம் காண முகப்­புத்­தகம் உள்­ளிட்ட சமூக தளங்­களே கார­ண­மாக அமைந்­தன. அந்த சம்­ப­வத்­துடன் நாம் உட­ன­டி­யாக தீர்­மானம் எடுத்து சமூக தளங்­களை முடக்­கி­ய­மையே பிரச்­சி­னைகள் கட்­டு­ப­டுத்த ஏது­வாக அமைந்­தது. நாம் அவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுத்­தி­ருக்­கா­விட்டால் கண்­டிக்கு மட்டும் அல்ல நாடு முழு­வ­துமே இவ்­வா­றான இன முரண்­பா­டுகள் பர­வி­யி­ருக்க அதிக வாய்ப்­புகள் இருந்­தன. ஆகவே நாம் எடுத்த தீர்­மா­னங்கள் நாட்­டினை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­யாக அமைந்­தது. எனினும் முகப்­புத்­தகம் உள்­ளிட்ட சில சமூக தளங்கள் முடக்­கப்­பட்­டதன் மோச­மான விளை­வு­களும் ஏற்­பட்­டுள்­ளன. அதனை நாம் மறுக்க முடி­யாது.

நாம் இவற்­றினை முடக்­கி­ய­மையின் பிர­தி­ப­லிப்பு எமது பொரு­ளா­தா­ரத்­திலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக வெளி­நா­டு­களில் உள்ள கூட்டு நிறு­வ­னங்­களின் உறுப்­பி­னர்கள் கடந்த வாரம் முழு­வதும் இலங்­கைக்கு வருகை தந்து எம்­மிடம் முறைப்­பா­டு­களை செய்து வரு­கின்­றனர். இந்த செயற்­பா­டுகள் கார­ண­மாக தமது நிறு­வ­னங்கள் பாரிய நஷ்­டங்­களை சந்­தித்து வரு­வ­தாக கூறு­கின்­றனர். ஆனால் முகப்­புத்­தகம் உள்­ளிட்ட தளங்­களை மூடி­யதன் கார­ண­மாக அரச நிறு­வ­னங்­களின் வருவாய் உயர்­வ­டைந்­துள்­ளது. இலங்கை தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழு­விற்கு ஒரு நாளைக்கு 200 மில்­லியன் வருவாய் அதி­க­ரிப்பை காட்­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

ஆகவே இரு வகை­யி­லான விளை­வு­க­ளையும் நாம் சந்­தித்­துள்ளோம். எனினும் முகப்­புத்­தகம் மற்றும் ஏனைய சமூக வலைப்­ப­திவு தளங்­களின் மூல­மாக தனி நபர்கள் தவ­றாக பயன்­ப­டுத்தும் செயல்­களை கட்­டு­ப­டுத்த உரிய நிறு­வ­னங்­க­ளுடன் நாம் உடன்­ப­டிக்­கை­களை செய்து இவ்­வா­றான நிலை­மை­களை கட்­டு­ப­டுத்தும் செயற்­பா­டுகள் குறித்து இணக்­கப்­பாடு கண்­டுள்ளோம். வழங்­கப்­பட்­டுள்ள சுதந்­த­ரத்தை தவ­றாக பயன்­ப­டுத்தி சமூ­கத்தை அழிக்கும் செயற்­பா­டுகள் குறித்தும் நாம் கடி­ன­மான தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். ஆகவே இந்த நிலை­மை­களை கருத்தில் கொண்டு சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்­து­வதில் புதிய வேலைத்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த நான் தீர்­மா­னித்­துள்ளேன் என்றார்.

மேலும் நேற்று முற்­பகல் டோக்­கி­யோவில் உள்ள நவீன கழிவு முகா­மைத்­துவ நிலை­யத்­தையும் ஜனா­தி­பதி பார்­வை­யிட்டார். சுமார் 9.3 மில்­லியன் மக்கள் வாழும் டோக்­கியோ நகரில் நாளாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழி­வுகள் வெளி­யேற்­ப­டு­வ­துடன், இவற்றை முகா­மைத்­துவம் செய்­வ­தற்­காக இது போன்ற 23 மத்­திய நிலை­யங்கள் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஜனா­தி­பதி பார்­வை­யிட்ட சின­கா­வாவில் உள்ள திண்மக் கழிவு முகா­மைத்­துவ நிலை­யத்தில் சுமார் 60 மெற்றிக் தொன் திண்மக் கழி­வுகள் நாளாந்தம் முகா­மைத்­துவம் செய்­யப்­ப­டு­கின்­றன. நவீன தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி சூழல் நட்­பு­டைய வகையில் இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன், அந்த நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி பார்­வை­யிட்டார்.

கழிவு முகா­மைத்­துவ செயற்­பா­டு­க­ளுக்கு மேல­திக பெறு­பே­றாக உற்­பத்தி செய்­யப்­படும் அனல்மின் மின்­சக்­தி­யாக மாற்­றப்­ப­டு­வ­துடன், இந்த மின்­சக்தி திண்மக் கழிவு முகா­மைத்­துவ நிலை­யத்தின் பயன்­பாட்­டுக்­காக பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­துடன், எஞ்­சிய தொகை தேசிய மின்­கட்­ட­மைப்­புடன் இணைக்­கப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை இலங்­கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் தலைவரினால் இந்த நிலையத்தின் பணிகள் குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு விரிவாக விளக்கப்பட்டது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ ஆகியோரும் இந்கிழ்வில் கலந்துகொண்டனர்.

பேஸ்புக்கை முடக்கியதால் நாடு பொரு­ளா­தார ரீதியில் பாதக விளை­வு­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வருகின்றது. பேஸ்புக்கை முடக்கியதால் நாடு பொரு­ளா­தார ரீதியில் பாதக விளை­வு­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வருகின்றது. Reviewed by nafees on 00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.