நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் விமர்சிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வித அருகதையுமில்லை.

(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் விமர்சிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அருகதையில்லை.
அவருடைய ஆட்சியிலே வரலாற்றில் என்றுமில்லாதவகையில் நீதித்துறை பாதிக்கப்பட்டிருந்தது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும் மக்களுக்கு சட்டத்துறையில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதாகவும் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவிக்கின்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு தொடர்பாக கதைப்பதற்கோ அது தொடர்பில் விமர்சிப்பதற்கோ அவருக்கு அருகதையில்லை. தற்போது சட்டம் அனைவருக்கும் பொதுவாக நிலைநாட்டப்படுவதால்தான் அவரால் சுதந்திரமாக கதைக்கமுடியுமாக இருக்கின்றது.
அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்திலே வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து இருந்ததுடன் நீதித்துறை முற்றாக சர்வாதிகார போக்கிலே செயற்பட்டு வந்தது. குறிப்பாக உயர் நீதிமன்ற நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கப்பட்டமை, அரசாங்கத்தை விமர்சித்து எழுதியமைக்காக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை, ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் ஊடக நிறு வனங்கள் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சி காலத்திலே இடம்பெற் றன. அத்துடன் தற்போதும் மஹிந்த ராஜபக் ஷவின் சகாக்களே சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்தைப் போன்று அல்லாமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுவதால்தான் கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் அரசாங்கத்தின் உறுதியற்ற நடவடிக்கைகளே மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் தலைதூக்க காரணமாகும். அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சிப்பதுடன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சவால்களையும் முன்வைத்து வருகின்றார். குறிப்பாக அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் முடியுமானால் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துமாறு தெரிவிக்கின்றார். ஆனால் அரசாங்கம் இது
வரை அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அரசாங்கத்தில் இருக்கும் பிரதான இரண்டு கட்சிகளும் எஞ்சியிருக்கும் காலத்திலாவது முறையாக செயற்பட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். ராஜபக் ஷவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் ஜனாதிபதிக்கே ஆபத்து ஏற்படும். நாடும் சீரழிந்துவிடும். அத்துடன் கடந்த 3வருடங்களில் இவர்கள் முறையாக செயற்பட்டிருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட் சியே உருவாகி இருக்காது என்றார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் விமர்சிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வித அருகதையுமில்லை.
Reviewed by nafees
on
00:02
Rating:
Reviewed by nafees
on
00:02
Rating:
No comments: