இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்



இலங்கை தபால் திணைக்களம் இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை
முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள அஞ்சல் தலைமையகத்தில் தபால் திணைக்களம், சம்பத் வங்கியுடன் இணைந்து e-Pay Mobile Cash சேவையை ஆரம்பித்து வைக்கும் போது அவர் இவ்வாறு உரையாற்றினார்.

தபாலகத்தின் காசு கட்டளை சேவையின் ஊடாக பண வைப்பு செய்தவுடன் நாட்டிலுள்ள எந்தவொரு சம்பத் வங்கி ஏரிஎம் வலைப்பின்னலில் இருந்தும் பணத்தை மீளப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்  இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் Reviewed by nafees on 01:15 Rating: 5

No comments:

Powered by Blogger.