பேஸ்புக்கில் இன, மதவாதத்தை தூண்டி கைதான முன்னாள் இராணுவ கப்டனுக்கு விளக்கமறியல்.

(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பாதுகாப்பு முகாமையாளராக செயற்பட்டு
வந்ததாக கூறப்படும், முன்னாள் இராணுவ கப்டன் தர அதிகாரியான கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீநாத் பெரேரா என்பவரை கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார ஏப்ரல் மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நேற்று உத்தரவிட்டார்.
பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இன, மதவாதத்தை தூண்டும் கருத்துக்களை பரப்பி வன்முறைகளுக்கு தூபமிடும் வண்ணம் நடந்துகொண்டார் என, தேசிய உளவுத் துறையின் பணிப்பாளரின் முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் அவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த இராணுவ முன்னாள் கப்டனான ஸ்ரீநாத் பெரேரா, அவரது தொலைபேசியில் பேஸ் புக் சமூக வலைத்தளக் கணக்கை இயக்கியமை, சொந்த பெயரில் இயக்கப்பட்ட அந்த கணக்கு ஊடாக இன மற்றும் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தி வன்முறைகளை தூண்டும் கருத்துக்களை சுயமாக பரப்பியமை தொடர்பில் விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையிலேயே அவரைக் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது. அதன்படியே 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆவது அத்தியாயத்தின் பிரகாரமும், கணினி சட்டத்தின் பிரகாரமும் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என சுட்டிக்கடடிய நீதிவான் லால் ரணசிங்க பண்டார சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பேஸ்புக்கில் இன, மதவாதத்தை தூண்டி கைதான முன்னாள் இராணுவ கப்டனுக்கு விளக்கமறியல்.
Reviewed by nafees
on
23:56
Rating:
Reviewed by nafees
on
23:56
Rating:
No comments: