வட மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன்.... வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் நியமனம்.


மேல்­மா­காண ஆளு­ந­ராக கட­மை­யாற்றும் கே.சி.லோகேஸ்­வ­ரனை வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்க அர­சாங்கம்
தீர்­மா­னித்­துள்­ள­தாக அரச உயர்­மட்­டத்­தி­லி­ருந்து நம்­ப­க­ர­மாகத் தெரிய வரு­கி­றது. பாகிஸ்­தா­னுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­ய­வுடன் இந்­நி­ய­மனம் இடம்­பெறும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

  இது­தொ­டர்பில் மேல்­மா­காண ஆளுநர் கே.சி. லோகேஸ்­வ­ரனை தொடர்பு கொண்டு கேட்­ட­போது, தான் அதற்கு இணக்கம் தெரி­வித்­த­தா­கவும் மேலும் ஜனா­தி­பதி நாடு திரும்­பிய பின்­னரே அது­கு­றித்து திட்­ட­வட்­ட­மாகத் தெரி­விக்க முடியும் என்றும் கூறினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாகிஸ்­தா­னுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை மேற்­கொள்­வ­தற்கு முன்னர் 9மாகா­ணங்­களின் ஆளு­நர்­க­ளையும் அவ­ரது இல்­லத்­துக்கு அழைத்து

பேசி­ய­துடன் அவர்கள் விரும்­பிய மாகா­ணங்­க­ளுக்கு இட­மாற்­றத்தை தெரி­வு­செய்து கொள்­ளலாம் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­த­வ­கையில் 9மாகா­ணங்­களின் ஆளு­நர்­களும் ஒன்­று­கூடி தமக்­கி­டையில் பேசி தாம் விரும்­பிய பிராந்­தி­யங்­களை தெரிவு செய்­துள்­ளனர். அந்­த­வ­கையில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மத்­திய மாகா­ணத்­துக்­கான ஆளு­ந­ராக செல்­ல­வுள்ள நிலையில், மேல்­மா­காண ஆளு­ந­ராக கட­மை­யாற்றும் கே.சி. லோகேஸ்­வரன் வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.

ஆளுநர் ஒரு­வரின் சேவைக்­காலம் ஒரே இடத்தில் மூன்று வரு­டங்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஆளு­நர்கள் சிலர் இரண்­டரை தொடக்கம் மூன்று வரு­டங்­களை பூர்த்தி செய்­துள்­ளனர். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர்­களின் இட­மாற்­றமும் அமைந்­துள்­ளது. வடக்கு மாகாண ஆளு­ந­ராக கே.சி. லோகேஸ்­வரன் நிய­மிக்­கப்­படும் பட்­சத்தில் வர­லாற்றில் முதல் தட­வை­யாக வடக்கு மாகா­ணத்தில் நிய­மிக்­கப்­பட்ட தமிழர் என்ற பெரு­மை­யையும் அவர் பெறு­கிறார்.

1988ஆம் ஆண்டு தொடக்கம் இது­வ­ரையில் 30வரு­ட­கா­ல­மாக தமிழர் ஒருவர் வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­க­மைய சப்­ர­க­முவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென்­மா­காண ஆளு­ந­ரா­கவும், மத்­தி­ய­மா­காண ஆளுநர் நிலூக்கா ஏக்­க­நா­யக்க சப்­ர­க­முவ மாகாண ஆளு­ந­ரா­கவும், தென்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வடமத்திய மாகாண ஆளுநராகவும், வடமத்திய ஆளுநர் பி.பீ. திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன்.... வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் நியமனம். வட மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன்....  வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் நியமனம். Reviewed by nafees on 01:46 Rating: 5

No comments:

Powered by Blogger.